Thursday, July 28, 2011

கண்ணீர்

இரு கரைகளையும் சேர்க்கும் நதி 

காணாமல் போனதே
நேற்று. 

இன்று 
இரு கரைகளை சேர்க்கும் மணல் 
வீடுகளை கட்டும் பொருளானதே 

இக்கரையில் வாசல், அக்கரையில் ஜன்னல் 
தொட்டியில் செடிகள் வளருதே.

வீட்டிற்குள் உபயோகிக்க 
நிலத்தடியிலிருந்து எடுக்கபடுகிறதே 
அது தண்ணீர் அல்ல.

தாகத்தில் தத்தளிக்கும் நம் பூமி தாயின் 
கண்ணீர் !

துடைத்துவிடாதிர்கள்



                        .......  சுரேஷ் அய்யர் 

2 comments: